Wednesday, December 19, 2007

7 Precautions After Meal.

WOH BHEEGEY PAL

7 Precautions After Meal.

* Don't smoke-Experiment from experts proves that smoking a cigarette after meal is comparable to smoking 10 cigarettes (chances of cancer is higher).
* Don't eat fruits immediately - Immediately eating fruits after meals will cause stomach to be bloated with air. Therefore take fruit 1-2 hr after meal or 1hr before meal.

* Don't drink tea - Because tea leaves contain a high content of acid.This substance will cause the Protein content in the food we consume to be hardened thus difficult to digest.

* Don't loosen your belt - Loosening the belt after a meal will easily cause the intestine to be twisted &blocked.

* Don't bathe - Bathing will cause the increase of blood flow to the hands, legs & body thus the amount of blood around the stomach will therefore decrease. This will weaken the digestive system in our stomach.
* Don't walk about - People always say that after a meal walk a hundred steps and you will live till 99. In actual fact this is not true. Walking will cause the digestive system to be unable to absorb the nutrition from the food we intake.
* Don't sleep immediately - The food we intake will not be able to digest properly. Thus will lead to gastric & infection in our intestine... .....

FINALLY DON'T JUST KEEP THIS E-MAIL
WITH YOU.......PLEASE FORWARD IT TO YOUR FRIENDS...LET THEM BE AWARE!!


பில்லா - ‌விம‌ர்சன‌ம்



அஜீத்குமார், நயன்தாரா, நமீதா, பிரபு, ரகுமான், ஆதித்யா, சந்தானம் நடிப்பில் நீரவ்ஷா ஒளிப்பதிவில் யுவன் சங்கர்ராஜா இசையில் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள படம். தயாரிப்பு ஆனந்தா பிக்சர்ஸ் சர்க்யூட் மற்றும் ஐங்கரன் இண்டர்நேஷனல்.

பிரபலமான கடத்தல்காரன் பில்லா. கொலை, கொள்ளை, ஆயுதக் கடத்தல், அவனுக்கு அத்துப்படி. அவனைப் பிடிக்க போலிஸ் வலை விரிக்கும் போதெல்லாம் புத்திசாலித்தனமாக தப்பி விடுகிறான். ஒரு கட்டத்தில் அவனைப் போலிஸ் பிடிக்கப் போகும்போது மோதல் நடக்கிறது. பில்லா இறக்கிறான். ஆனால் அதை மறைத்துவிட்டு டிஎஸ்பி பில்லாவின் பின்னணியைக் கண்டுபிடித்து அவர்களின் ஆணிவேரை அழிக்க நினைக்கிறார். அதற்கு பிக்பாக்கெட்காரன் வேலுவை அவர்கள் கூட்டத்தில் பில்லாவாக நடிக்க வைக்கிறார்.

பில்லாவின் பின்னணி பற்றிய தகவல்கள் தெரியும்போது டிஎஸ்பி சுட்டுக் கொல்லப்படுகிறார். பிறகுதான் தெரிகிறது போலிஸ் கூட்டத்திலேயே பில்லாவின் பின்னணி ஆட்கள் இருப்பது. பில்லாவை இயக்கும் ஜெகதீஷ்தான்... உயர் போலிஸ் அதிகாரி கோகுல்நாத் என்பது தெரிகிறது வேலுவுக்கு. ஆனால் வேலுவைக் கைது செய்து பில்லா என்று நம்புகிறது போலிஸ். வேலு மீள்வதும் பில்லாவின் பின்னணியில் இருக்கும் ஜெகதீஷ் வெளிக்கொண்டு வரப்பட்டு மாள்வதும்தான் க்ளைமாக்ஸ்.





ரஜினி நடித்த பழைய பில்லாவின் ரீமேக்தான் இது. அது அப்போதைய காலக்கட்டத்தில் கலக்கிய படம். புது பில்லா இப்போதைய பிரம்மாண்டத்திலும் தொழில்நுட்பத்திலும் மிரட்டுகிறது.

கதை ஆரம்பிக்கும்போதே பரபரப்பு! துப்பாக்கி முனை துரத்தல்கள் தப்பித்தல்கள் என்று மிரட்டுகிறது. இந்த கத்திமுனை படபடப்பை கடைசிவரை பராமரித்திருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.

அஜீத்துக்கு இரு வேடங்கள். பில்லாவாக பின்னி பெடலெடுக்கிறார் என்றால் வேலுவாக விளாசி வெளுத்து வாங்கியிருக்கிறார்.

அஜீத்தின் தோற்றம் பேச்சு தோரணை பாவனை எல்லாவற்றிலும் ஸ்டைல். அந்த ரஜினியை துளிக்கூட நகலெடுக்காமல் அசலாக அசத்தலாக நடித்திருப்பது சிறப்பு.

எதிரே துப்பாக்கியுடன் நிற்கும் எதிரிகளை முதுகுக்குப் பின்னாலிருந்து இரண்டு துப்பாக்கிகளை எடுத்து விளாசும்போது அஜீத் செய்வது அமர்களம். தன் கூட்டத்திலிருந்து தப்பிக்க முயல்பவனை சிரித்துக் கொண்டே காருடன் எரித்துக் கொள்வதும் அவன் காதலி மீது காரேற்றிக் கொள்வதும் கொடூரம். அந்த பில்லாவின் கொடிய முகத்தைக் காட்டும் காட்சிகள். ஒரு கட்டத்தில் போலிஸ் முற்றுகையின்போது பிரபு ரோவாவை விட்டுடு... இல்லாட்டி சுட்டுடுவேன் என்று மிரட்டும்போது துப்பாக்கியை கையில் வச்சிக்கிட்டு சும்மா மிரட்டுனா பில்லாவுக்குப் பிடிக்காது என்று பஞ்ச் கொடுக்கிறார். தோட்டா இல்லாத துப்பாக்கியுடனே தப்பிப்பது பில்லாவுக்குள் இருக்கும் கிரிமினல் மூளையைக் காட்டும் காட்சி. அஜீத்தின் மிரட்டும் நடிப்பு. ஒரு துரத்தல் காட்சியில் காரை சுழன்று சுழன்று சீறவிட்டு சங்குசக்கரமாய் சுழலவைத்து பறப்பது, தலையை கிறுகிறுக்க வைக்கும்போது அஜீத்தின் தில் வெளிப்படுகிறது.



இப்படி பில்லாவின் சாகசங்களை ஓர் அஜீத் கண் முன் நிறுத்துகிறார் என்றால் பிக்பாக்கெட் வேலுவாக வரும் இன்னொரு அஜீத்தும் சளைக்காமல் சாதுர்யம் காட்டுகிறார்.

அந்த ஆறுமுகனுக்கு ஆறுதலை எனக்கு ஒரே தலை என வசனம் பேசி கலகலப்பூட்டுகிறார். பில்லாவாக நிறம்மாறி நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

நயன்தாரா, நமீதா இருவருமே இருக்கிறார்கள். நயன்தாரா ஹாலிவுட் கனவுக்கன்னி ரேஞ்சுக்கு கவர்ச்சியில் ஜொலிக்கிறார். உயரமான கட்டடத்திலிருந்து கயிற்றில் தொங்கி சாகசமும் காட்டியிருக்கிறார் நயன். ஆனால் பெரும்பாலும் முகத்தையும் உடைகளையும் இறுக்கமாக வைத்துக் கொண்டே வந்து போவதால் கவர்ச்சி வெளிப்பட்ட அளவுக்கு நடிப்பு வெளிப்படவில்லை. நயன்தாராவில் கவர்ச்சி முன்பு நமீதா காணாமல் போய்விடுகிறார்.

டி.எஸ்.பி. ஜெயப்பிரகாஷாக வரும் பிரபு குறையில்லாமல் செய்திருக்கிறார். உயர் போலிஸ் அதிகாரி கோகுல்நாத்தாக வரும் ரகுமான் நல்ல தேர்வு. அவர்தான் ஜெகதீஷ் என கதை திரும்புவது புது திருப்பம். சந்தேகக் கண்ணுடன் வரும் ஆதித்யா நல்லவர் என்பதும் நல்ல திருப்பம்.

படத்தில் கொடி கட்டிப் பறப்பது அஜீத்தின் ஆட்சி என்பது தெரியும். இன்னொருவர் கொடியும் உயரே பறக்கிறது. அவர்தான் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா. படத்தை ஹாலிவுட் படம் போல பளிச்சிட வைத்திருப்பது இவரது கேமராவின் உழைப்பினால்தான்.

மலேசியாவைக் கண்முன் நிறுத்தியிருப்பது, அந்த உயரமான தொங்கு பாலம்... சம்பந்தப்பட்ட காட்சிகள், முருகன் கோவில் காவடியாட்டம் திருவிழா என நீரவ்ஷாவின் கேமரா கோணங்கள் விழிகளை விரிய வைப்பவை.



யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களில் புதுமை உள்ள அளவுக்கு இனிமை இல்லாதது ஒரு குறை. அளவோடு அழகான வசனங்களை எழுதியிருக்கிறார் ராஜ் கண்ணன். பழைய படமென்றாலும் புது மெருகுடன் புது பாலிஷாக - புது ஸ்டைலில் உருவாக்கி இயக்குநர் விஷ்ணுவர்தன் வெற்றி பெற்றுள்ளார்.

Thursday, September 20, 2007

சிறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவ டி.வி.எஸ். கேப்பிடல் ஃபண்ட் அறிமுகம்!

டி.வி. எஸ். குழுமம் தனியார், நடுத்தர, மற்றும் குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்ய போகிறது!

இதற்காக டி.வி.எஸ். கேப்பிடல் ஃபண்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை துவக்கியுள்ளது. இது அசட் மேனெஜ்மென்ட் என்று அழைக்கப்படும் சொத்து நிர்வகிப்பு நிறுவனமாக இருக்கும். இந்த நிறுவனம் சென்னையில் இருந்து இயங்கும்.

இந்தியாவின் தனியார், நடுத்தர மற்றும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படும் தொழில் மற்றம் வர்த்தக நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இவற்றின் வளர்ச்சிக்கும், விரிவு படுத்தவும் வர்த்தகத்தில் அனைத்து நீக்கு போக்குகளும் தெரிந்த திறமையான நிர்வாகிகளின் ஆலோசனையும், வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது.

இத்தகைய நிறுவனங்களுக்கு டி.வி.எஸ் கேப்பிடல் பண்ட்ஸ் லிமிடெட், கூட்டாளியாகவும், அவர்களின் மேம்பாட்டிற்கான நிதியை முதலீடு செய்யும் நிறுவனமாக இருக்கும் என்று இதன் நிறுவனர் கோபால் ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள பத்திரிக்கையில் செய்தியில் கூறியுள்ளார்.

இந்தியாவில் பெரு நகரங்களை தவிர்த்து, மற்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான கணிசமான முதலீட்டுடன் இயங்கும் நிறுவனங்களும், குடும்ப உறுப்பினர்களால் நிர்வகிப்பபடும் நிறுவனங்கள் இருக்கின்றன. இவைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப, தங்களின் தொழில், வர்த்தகத்தை விரிவு படுத்த வேண்டும் என நினைக்கின்றன. இதற்காக இவை சரியான பங்குதாரரையும், உற்பத்தி மற்றும் நிர்வாகத்தை திறம்பட நிர்வகிக்க, நிபுணர்களின் உதவி தேவை என எண்ணுகின்றன.

இதை நிறைவேற்றும் விதத்தில் டி.வி.எஸ் கேப்பிடல் பண்ட்ஸ் லிமிடெட், பல்வேறு உதவிகளை செய்யும். சரியான வழிகளில் வர்த்தகம் செய்வது, உள்கட்டமைப்பு வசதிகள், பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் வர்த்தக தொடர்பை ஏற்படுத்துதல் உட்பட பல்வேறு உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கும். இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, தைவான் போன்ற நாடுகளில் உள்ள, இதே போன்ற நிறுவனங்களுக்கும் உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கும்.

இதற்காக அமெரிக்காவில் பூஸ்டனில் உள்ள டியூட்சிசு பேங்க்ஸ் டெக்னாலஜி இன்வெஸ்ட்மென்ட் வங்கியைச் சேர்ந்த சுரேஷ் ராஜூ என்பவரை நியமித்துள்ளது.

இந்த புதிய நிறுவனத்திற்கு தேவைப்படும் முதலீடு நிதி சந்தையில் இருந்து திரட்டப்படும். இது ஏற்கனவே இயங்கிவரும் நிறுவனங்களுக்கு மட்டுமே விரிவுபடுத்துதல், புதிய பிரிவை தொடங்குதல் போன்ற தேவைக்கான நிதியை முதலீடு செய்யும்.

புதிதாக தொழில் தொடங்குவதற்கு ஆரம்ப கட்ட முதலீட்டையோ அல்லது புதிய வகை தொழில்களுக்கான முதலீட்டையோ செய்யாது என தெரிவிக்கப்படுள்ளது.

தங்கம், வெள்ளி விலை குறைந்தது!

மும்பை சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று குறைந்து காணப்பட்டது!

வெள்ளி நேற்றைய விலையை விட கிலோவுக்கு ரூ.120 குறைவாக விற்பனையானது. இதேபோல் தங்கத்தின் விலையும் 10 கிராமுக்கு ரூ.75 குறைந்தது.

நகை தயாரிப்பாளர்கள் வாங்குவதில் ஆர்வம் செலுத்தாததே இந்த விலை குறைவுக்கு காரணம் என்று மும்பை மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க மத்திய வங்கி வட்டியை அரை சதவிதம் குறைத்ததால், முதலீட்டாளர்கள் புதன்கிழமையன்று அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்தனர்.

ஆனால் இன்று தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்தது. இதனால் விலை உயரவில்லை என டோக்யோவில் தங்கம் வெள்ளி சந்தையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதே போல் நியுயார்க் தஙகம், வெள்ளி சந்தையிலும் விலை உயரவில்லை.

மும்பையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது வெள்ளி கிலோ ரூ.17,720-க்கும், தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ.9,425 க்கும், ஆபரணத் தங்கம் ரூ.9,375 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

M >< A >< G >< I >< C

TRY!



MAGIC #1

An Indian discovered that nobody can create a FOLDER anywhere on the
Computer which can be named as "CON". This is something pretty
Cool...and Unbelievable. ... At Microsoft the whole Team, couldn't answer why this happened !
TRY IT NOW ,IT WILL NOT CREATE " CON " FOLDER



MAGIC #2

For those of you using Windows, do the following:

1.) Open an empty notepad file
2.) Type "Bush hid the facts" (without the quotes)

3 .) Save it as whatever you want.
4.) Close it, and re-open it.



MAGIC #3

Open Microsoft Word and type

=rand (200, 99)

And then press ENTER
Then see the magic...