Friday, April 4, 2008

தமிழ் திரையுலகினர் உண்ணாவிரத போராட்டம் துவங்கியது

கர்நாடகாவை கண்டித்து தமிழ் திரையுகினர் நடத்தும் உண்ணாவிரத போராட்டம் இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. இதில் முன்னணி நடிகர்கள் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். போராட்டத்தில் சத்யராஜ், முரளி, சந்திரசேகர், சரத்குமார், டி.. ராஜேந்தர், ராதாரவி, விஜயகுமார் மற்றும் நடிகைகளள் ராதிகா, விந்தியா, மனோரமா மஞ்சுளா, சத்யபிரியா உட்பட நடிகர் நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரைப்படத் தொழிலாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில், காலை 8 மணியிலிருந்து, மாலை 5 மணி வரை போராட்டம் நடைபெற உள்ளது. நடிகர், நடிகைகள் மற்றும் திரையுலக நிர்வாகிகள் அமர்வதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பேசிய கே.ஆர்.ஜி., இருமாநிலத்தவர்களும் சகோதர பாசத்துடன் இருக்க வேண்டும் என கூறினார். தமிழர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என கர்நாடகாவிற்கு எச்சரித்தர்

இந்த விஷயத்தை ஊதி பெரிசாக்க சன்.நியூஸ் முடிவு செய்துள்ளது. நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள். நடிகர் சீமானை பேட்டி எடுக்கிறார்கள். நடுவில் நடிகர்கள், நடிகைகள் பேட்டி என்று பரபரப்பாக இருக்கிறது.

டி.. ராஜேந்தர் - நாங்க இப்ப தான் இடிக்க ஆரம்பித்திருக்கிறோம். இன்னும் அடிக்க ஆரம்பிக்கவில்லை. அடித்தால் நீங்கள் ( கன்னட மக்கள் ) தாங்க மாட்டீர்கள்.

பார்த்திபன் - இது வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உண்ணாவிரதம் என்றார்.

பேசுபவர்கள்: எங்கள் படை திரண்டால் கர்நாடகம் தாங்காது என்று தவறாமல் சொல்லுகிறார்கள்.

ரஜினி வந்தார்
உண்ணாவிரத மேடைக்கு ரஜினிகாந்த் வந்தார். அங்கு கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர். முதல் வரிசையில் அமர்ந்த ரஜினி அவருக்கே உரிய ஸ்டைலில் கன்னத்தில் விரல் வைத்தபடி அமைதியாக இருந்து கொண்டிருக்கிறார்.

9962500500 பற்றிய தமிழ் வலைப்பதிவு இடுகைகள

ரெயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் போதே பயணிகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடனே ரெயில்வே போலீஸ் மற்றும் ஊழியர்களை உதவிக்கு அழைக்க டெலிபோன் வசதி செய்யப்பட்டுள்ளது.மாநில அரசின் ரெயில்வே பாதுகாப்பு போலீஸ் தெற்கு ரெயில்வே, வோடாபோன் நிறுவனம் ஆகியவை சேர்ந்து இந்த வசதியை செய்துள்ளன. இதற்காக 9962500500 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுப்பாடு அறை சென்னையில்.........
உள்ளது.

இந்த போனுக்கு தகவல் சொன்னால் உடனே அவர்கள் அந்த ரெயிலில் பயணம் செய்யும் பாது காப்பு போலீசாரின் செல் போனில் தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லி அறி வார்கள். அதே போல ரெயில்வே கார்டு நிலைய அதிகாரிக்கும் தகவல் கொடுப்பார்கள். இதன் மூலம் அடுத்த சில நிமிடங் களில் பயணிக்கு உதவி கிடைக்கும்.

இந்த வசதி 65 எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சென்னை மின்சார ரெயில்களிலும் கிடைக்கும். இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஒரு மாதம் ஆகிறது. அதற்கு 80 பேர் போன் செய்து உதவி பெற் றுள்ளனர்.

சமீபத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பய ணம் செய்த ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சக பயணி இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரி வித்தார். உடனே ரெயில்வே போலீசார் அந்த ரெயிலில் பயணம் செய்த டாக்டரை அழைத்து வந்து சிகிச்சை அளித்து காப்பாற்றி னார்கள்.

புதிய திட்டம் குறித்து ரெயில்வே ஐ.ஜி.மாகாளி கூறியதாவது:-

இதுவரை ரெயில் பயணி களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக 37 அழைப்புகளும், மருத்துவ உதவி கேட்டு 14 அழைப்புகளும், திருட்டு தொடர்பாக 16 அழைப்பு களும் வந்துள்ளன.

தனியாக பயணம் செய்த பெண்ணை ஈவ்டீசிங் செய்வ தாக புகார் வந்ததை அடுத்து ஒரு வாலிபரை கைது செய்தோம்.

இந்த வசதி செய்யப்பட்ட பிறகு உதவி தேவைப் படுபவர்களுக்கு நாங்கள் உடனடியாக உதவி செய் வதுடன் உரிய பாதுகாப்பு வழங்க முடிகிறது.
(நன்றி: மாலைமலர் )